இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி!

படம்
  புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல் - 08 புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி ! தொகையறா புவனமெல்லாம் காத்தருளும் தேவி - உந்தன் புகழ்பாடத் துடிக்குதுஎன் ஆவி தவமிருக்கேன் உன்பாதமலர் தூவி - எந்தன் உளமதிலே குடியிருக்கும் தேவி!                 (பாட்டு) புதுகையில் அருள்செய்யும் புவனேஸ்வரி -உன்னைப் புரிந்தோரின் வாழவெல்லாம் வரும்நிம்மதி புதுமைகள் தான்செய்ய நீயே கதி - நெஞ்சம் போற்றிடவே நான்தஞ்சம் உன்காலடி (புதுகையில்) பாவங்கள் தினம்போக்கும் பரமேஸ்வரி-உள்ளம் பண்படநல் வழிகாட்டும் மலர்ச்சேவடி பக்தர்கள் நினைவெல்லாம் நீயே குடி -உந்தன் பார்வையில் பனியாகும் பிணியின் பிடி (புதுகையில்) ஆசைகள் அழிந்தாலே சுகமாகும் - என்றும் அமைதியில் உன்வடிவம் உலகாளும் ஓம் என்னும் ஓசையே துணையாகும்- உள்ளம் உனையன்றி வேறேது நினைவாகும். (புதுகையில்) வருகின்றோம் நாமுந்தன் வாயிற்படி -துன்பம் வாராது காக்கின்ற கோவிற்படி அறியாத பலபேரும் அறியும்படி - வந்து அமர்ந்தாயே இம்மக்கள் ஆசைப்படி (புதுகையில்) இப்பாடலை எழுதியவர் நற்கவிச்...

கார்ப்பரேசன் கொழாயில வாட்டரக் காணோம்-

படம்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள் வரிசை - 07 கார்ப்பரேசன் கொழாயில வாட்டரக் காணோம்- இங்கே ஆப்பரேசன் தியேட்டர்ல டாக்டரக் காணோம் கட்டணக் கழிப்பறையிலே கதவையும் காணோம் காசு கொடுத்து உள்ளே போனா தண்ணியக் காணோம் பெருமாப்பட்டி குப்புத்தாயி டி.வி பார்க்குது- அவ பேரன்லவ்லி போட்டு போட்டு கலர மாத்துது விடிய விடிய முழுச்சிக்கிட்டு டீவி பார்க்குது விடிஞ்சு மணி எட்டாச்சு இன்னும் தூங்குது சத்தியமா நாடு போற போக்கு சரியில்ல - இத யாரிடம் போய்ச் சொல்லுவது நமக்கும் புரியல புத்தகமும் நோட்டுமில்ல பள்ளிக்குப் போறான்  - பையன் மறக்காம பான்பராக்கை வாங்கிட்டு போறான் டாஸ்மாக் கடையைப் பார்த்து சிரிச்சிட்டு போறான்- அவ செல்போன்ல சேதிகள சொல்லிட்டு போறான் மழைகாலம் வந்திச்சுன்னா மறந்திடாதிங்க குடையில்லாம சர்க்கார் பஸ்ல ஏறிடாதீங்க என்னென்னமோ நடக்குதிங்க கண்ணு முன்னாலே எதித்து கேட்க நாதியில்ல ஏன்னு தெரியல சத்தியமா நாடு போற போக்கு சரியில்ல -இத யாரிடம் போய்ச் சொல்றது நமக்கும் புரியல.  அறந்தை பாவா , இயற்பெயர்  பாவா மொகய்தீன் , திருநெல்வேலி பத்தமடை. வணிகம் பொருட்டு புதுக்கோட்டை அறந்தாங...