இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அட சொல்லுங்கடா வந்து அள்ளுங்கடா

படம்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசை பாடல்கள் வரிசை - 06 பேல மட்டும் நீங்களா             அட சொல்லுங்கடா அள்ளி போட மட்டும் நாங்களா              வந்து அள்ளுங்கடா ஒரு மிருகம் பேண்டதை              அட ஒரு மிருகம் அள்ளல அட ஆறறிவு கொண்ட முண்டமே              உன் அறிவுக்கு இது ஏன் எட்டல மலக்குழியில சாகுறோம்              அட கேட்க ஒரு துப்பில்ல இனி கரைச்சு ஊத்தி அடிக்கணும்              அட அதுல ஒன்னும் தப்பில்ல ஆள மட்டும் நீங்களா             அட சொல்லுங்கடா செத்து மாள மட்டும் நாங்களா              வந்து அள்ளுங்கடா மூக்கைப் பிடி...

இலங்கைத் தமிழர்களே எங்கள் இன்னுயிர் சொந்தங்களே

படம்
புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல்கள் வரிசை - 05 இலங்கைத் தமிழர்களே எங்கள் இன்னுயிர் சொந்தங்களே (2) இலங்கையின் மண்ணினைப் பொன்னாக்கித் தந்ததும் எந்தயர் திருக்கரங்கள் அந்தத் தேயிலைத் தோட்டத்தைச் செழிப்புற வளர்த்ததும் எங்கள் மங்கையர் வளைக்கரங்கள்  ( இலங்கை) கற்பின் கனலிகள் செல்வக் குழந்தைகள் கதறலும் கேட்கலையோ- எங்கள் காளையர் இரத்தமும் கடலினில் பாய்வதைக் கண்கொண்டு பார்க்கலையோ ( இலங்கை) நித்தம் நித்தம் அங்கு செத்து மடிகிறார் எங்களின் மீனவர்கள் எங்கள் புத்தனின் போர்வையில் இரத்தம் குடித்திடும் பொல்லாத வல்லூறுகள்  (இலங்கை) ஒன்று இரண்டல்ல இருபத்து ஐந்து வருடம் ஓடி மறைந்தது காண் இனி உங்கள் விழிநீரைத் துடைத்திடும் நாள்வரை ஓய்ந்திடோம் நாங்களும்தான் தலைச் சாய்ந்திடோம்  நாங்களும்தான்! (இலங்கை) இப்பாடலை இயற்றிப் பாடியவர் செம்பை மணவாளன் அவர்கள். இவர் எழுத்தாளர், கவிஞர், பாடகர். இசைக்குழு நடத்தி பல்வேறு பாடல்கள் பாடியவர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநிலத் தலைவர்களில் ஒருவர்.   2003 ஆம் ஆண்டு தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இலங்கைத் ...

பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா

படம்
  புதுக்கோட்டையில் பிறந்த மக்களிசைப் பாடல்கள் வரிசை – 04   பொன்மகளே தேவியம்மா பொற்பனை காளியம்மா ஆலங்குடி நாடியம்மா அறந்தாங்கி வீரகாளியம்மா திருவப்பூரில் வாழ்பவளே முத்துமாரியம்மா திருவேற்காட்டில் அமர்ந்தவளே கருமாரியம்மா (பொன்மகளே)   நாகையிலே வாழ்பவளே நெல்லுக்கடை மாரியம்மா நார்த்தாமலை நாயகியாம் நல்ல முத்துமாரியம்மா சக்தி உமையானவளே சமயப்புரத்து மாரியம்மா சத்தியமங்கலத்தில் பண்ணாரி மாரியம்மா அகிலம் எல்லாம் உன்னாட்சி அம்மா உந்தன் அருளாட்சி ( பொன்மகளே)   தில்லையிலே தில்லைநாயகி திருச்சிற்றம்பலத்தில் பெரியநாயகி தென்மதுரை நகரினிலே தெப்பக்குளத்து மாரியம்மா திருநெல்வேலியிலே காந்திமதி அம்மா பொன்மாரி பொழிபவளே பொள்ளாச்சி மாரியம்மா புதுகையில் அமர்ந்தவளே புவனேஸ்வரி அம்மா அகிலம் எல்லாம் உன்னாட்சி அம்மா உந்தன் அருளாட்சி ( பொன்மகளே)   கோவைமா நகரினிலே தண்டு மாரியம்மா ஈரோட்டு நகரிலே இரண்டு மாரியம்மா சின்னமாரி பெரியமாரி சேர்ந்து இரண்டு பொன்னுத்தாயி சேலம் மாநகரினிலே கோட்டை மாரியம்மா சிங்கப்பூர் நாட்டிலே வீரமாகாளியம்மா மலைமேல வாழ்கின்ற இஞ்...